மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை நிகழ்கின்ற 2005ஆம் ஆண்டு உலக மகளிர் ஆண்டாக அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சுத் திங்கள் எட்டாம் நாள் உலகம் முழுதும் மகளிர் நாளாகவும் கொண்டாடவும் முடிவெடுக்கப் பட்டுள்ளது! புதுச்சேரியில், மார்ச்சு எட்டாம் நாள் (செவ்வாய்க் கிழமை) மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பாக, புதுவை செயராம் திருமண நிலையத்தில், உலக மகளிர் நாள் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அவ்வமயம் புதுவையின் மேதகு துணைநிலை ஆளுநர் திரு எம்.எம்.லகேரா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்ற, புதுவையின் முதலமைச்சர் மாண்புமிகு ந. அரங்கசாமி அவர்கள் சீரிய தலைமையேற்க, மேதகு ஆளுநரின் துணைவியார் திருமதி புஷ்பா லகேரா அவர்கள், பெண்கள் மேம்பாட்டிற்காக சீர்மையாக செயலாற்றும் மகளிர் தன்னார்வ அமைப்புகளுக்கு பணப் பரிசுகள் வழங்கி பெருமைப் படுத்த, புதுவையின் தொழில் மற்றும் நலவழித் துறை அமைச்சர் மாண்புமிகு எம். சந்திரகாசு அவர்கள் பங்கேற்று ஆராக்கியமான குழந்தைகட்கு பரிசுகள் வழங்க, மேலும் சட்டமன்ற உறுப்பினர் திரு ஏ.எம். கிருஷ்ணமூர்த்தி, தலைமைச் செயலர் சி.எஸ். கெயிர்வால், வளர்ச்சி ஆணையர்/மகளிர்-குழந்தைகள் மேம்பாட்டுச் செயலர் திரு பி.வி. செல்வராஜ் ஆகியோரும் பங்கேற்க விழா இனிதே நடைபெற்றது. கலை, பண்பாட்டுத் துறை புதுச்சேரியில், உலக மகளிர் நாளான மார்ச்சு எட்டாம் நாள் (செவ்வாய்க் கிழமை) கலை, பண்பாட்டுத்துறை சார்பாக, புதுவை நகர மன்ற விழா மண்டபத்தில் (மேரி), உலக மகளிர் நாளானது ஔவையார் பயிலரங்கமாக கொண்டாடப்பட்டது. அவ்வமயம் கலை, பண்பாட்டுத்துறை இயக்குநர், செல்வியர் பி. சுமதி அவர்கள் குத்துவிளக்கேற்றி விழாவினைத் துவக்கி வைக்க, புதுவைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப்புல முதன்மையர் முனைவர் திரு அறிவுநம்பி அவர்களும், தமிழ்மாமணி புலவர் திரு சீனு இராமச்சந்திரன் அவர்களும் சிறப்புரையாற்ற, பேரா. தருமு - மைதிலி மற்றும் குழுவினரும், திரு உமர் எழிலன் மற்றும் குழுவினரும் அவ்வையார் பாடல்களுக்கு சிறப்புற இசையமைத்து இன்னிசை விருந்தளிக்க, முனைவர் திருமதி நாக. செங்கமலத் தாயார் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க விழா இனிதே நடைபெற்றாது. குழுப் பொறுப்பாளர்கள்: பேராசிரியர்கள் முனைவர் அசோக் குமரன், முனைவர் இளமதி சானகி ராமன், முனைவர் சிவ.மாதவன், முனைவர் பட்டம்மாள், முனைவர் எ.மு. இராஜன் ஆகியோர். பங்கேற்றோர் கலைமாமணி வேலவதாசன், திருமதி விசயலட்சுமி, திரு பி. அப்பலசுவாமி, உதவி நூலகத் தகவர் அலுவலர் திருமதி வே. கனி, கண்காணிப்பாளர், ஆகியோர்.
|